வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் தோசை –
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ , பச்சை மிளகாய் - 1, கறிவேற்பிலை சிறிதளவு, தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன், சிறிதளவு உப்பு கலந்து வையுங்கள்.
தோசையை ஊற்றி மேலே தூவி, சுட்டெடுங்கள்.
விரும்பினால் மாவுடன் கலந்தும் ஊற்றிக் கொள்ளலாம்.
அன்னாசித் தோசை
சிறிது எண்ணெயில் இஞ்சி பேஸ்ட் வதக்கி அன்னாசித் துண்டுகள் ½ கப், தக்காளித் துண்டுகள் ¼ கப் லேசாக வதக்கி மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன் உப்பு சேர்த்து விரும்பினால் மல்லித் தழை தூவி எடுத்து தோசை வார்த்து மேலே 2 டேபிள் ஸ்பூன் கலவையை வைத்து சுற்றிவர சிறிது எண்ணெய்விட்டு, மூடி போட்டு ஒரு புறம் சுட்டு எடுங்கள்.
டேட்ஸ் சட்னி தோசை
பச்சை மிளகாய் 1-2 உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்து வையுங்கள். சிறிய துண்டுகளாக டேட்சை வெட்டி எடுங்கள்.
தோசையை ஊற்றி நடுவில் மிளகாய்ப் பேஸ்ட் வைத்து சுற்றிவர டேட்ஸ் தூவிவிடுங்கள்.
வாய்க்கு ருசியான ஸ்வீட் அன்ட் ஹொட் தோசை தயாராகிவிட்டது.
வெண்டைக்காய்த் தோசை
அரிசி 2 கப் உடன் வெண்டைக்காய் 4 கலந்து அரைத்து எடுத்து தோசையாக ஊற்றி எடுக்கலாம்;.
உழுந்து, அரிசியுடன் வெண்டைக்காய்க் காம்பு அல்லது மூள் சிறிதளவு கலந்து அரைத்து எடுத்தால் மெதுமெதுப்பான தோசை கிடைக்கும்.
தேங்காய்த் துருவல் தோசை
உழுந்து 1 கப் அரிசி 3 கப்புடன் தேங்காய்த் துருவல் 1 கப் சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டு தோசை வார்க்கவும்.
இதுவும் மெத்தென்று வரும்.
மைசூர்ப் பருப்புத் தோசை
உழுந்துக்குப் பதில் மைசூர்ப் பருப்பை ஊற வைத்து அரிசியுடன் அரைத்து எடுத்து தோசையாக ஊற்றி எடுங்கள்.
இதே போல் சோயாப் பருப்பிலும் செய்து கொள்ளலாம்.
அவல்த் தோசை
ஒரு கப் அவலுடன், ஒரு கப் உழுந்து, ஒரு கப் பச்சை அரிசி அரைத்தெடுத்து ஊற்றிக் கொண்டால் மொறு மொறுப்பான அவல்த்தோசை தயார்.
உழுந்து மைதா மா தோசை
உழுந்து ஒரு கப், வெந்தயம் 2 ரீ ஸ்பூன், பச்சை அரிசி 4 டேபிள் ஸ்பூன் ஊறவைத்து அரைத்து எடுத்த மாவுடன் அவித்த மைதா மா 3 கப் கலந்து புளிக்க வைத்து சுட்டுக் கொள்ளுங்கள்.
வித்தியாசமான மெதுமெதுப்பான தோசை கிடைக்கும்.
விரும்பினால் மிளகு உள்ளி, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இத் தோசைக்கு உரலில் இட்டு இடித்த இடி சம்பல் மிகு சுவை கொடுக்கும்.
கப்ஸிக்கம் கலர்புல்த் தோசை
சிவப்பு, மஞ்சள், பச்சை நிற கப்ஸிக்கம் சிறியதாக வெட்டிக் கொண்டு சிறிது உப்பு மிளகு பிரட்டிக் கொள்ளுங்கள். தோசையை ஊற்றி கலவையை மேலே வைத்து எண்ணெய் விட்டு, மூடி போட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
விரும்பினால் வெங்காயம் தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆட்டுக் கொத்து இறைச்சித் தோசை
கொத்து ஆட்டு இறைச்சி ¼ கிலோ எடுத்து எண்ணெயில் வெங்காயம் ½ பச்சை மிளகாய் 1, தக்காளி 2, உள்ளி 2, உப்பு, மிளகாய்ப் பொடி 2 ரீ ஸ்பூன், மசாலா பொடி 1 ரீ ஸ்பூன், சோம்பு ¼ ரீ ஸ்பூன் முழுதாகச் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான கறி தயாரித்து எடுங்கள்.
தோசையை வார்த்து இக்கலவையைப் பரப்பி, சுற்றிவர எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுங்கள்.
விரும்பிய இறைச்சியில் செய்து கொள்ளலாம்.
மாதேவி
Saturday, May 30, 2009
Friday, May 1, 2009
பாட்டியின் மண் சட்டிக் கறி
சிறிய பல்ப் போன்ற தோற்றத்தில் பச்சைப் பசுமை நிறத்தில் வெள்ளை மேலங்கி போர்த்திய அழகான தோற்றம் உடையவை இவை.
வட்டுக் கத்தரிகாய்கள் ஏனைய காய்கறிபோல சந்தையில் பார்க்கும் இடமெல்லாம் இப்பொழுது கிடைக்கின்றன. Baddu, Baddu என சிங்களத்தில் கூவிக் கூவி விற்பர்.
கண்டதுமே வாங்கத் தூண்டும்.
வாங்கும் போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுங்கள். பிஞசு என்றால் கசப்பு சற்றுக் குறைவாக இருக்கும்.
வட்டுக் கத்தரி சுவையில் சற்று முகம் சுளிக்க வைக்கும் கசப்பினால்.
பாகற்காய், வாழை மொத்தி, குறிஞ்சா இலை போன்றவையும் அத்தகையனவே. கசப்பானவையே உடல் நலத்திற்கு ஏற்றதென்பது பலரதும் நம்பிக்கையாகும்.
இவற்றை கசப்பு நீக்கி சமைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் சேர்த்து பாற்கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு காரக் குழம்பாகவும், சுவைக்கு நெத்தலி கருவாடு சேர்த்தும் சுவை கூட்டலாம்.
பாட்டியின் கை மணத்திற்காக மண்சட்டியில் சமைத்துள்ளேன். நீங்கள் விரும்பிய பாத்திரத்தில் சமைத்துக் கொள்ளுங்கள்.
சமையற் பொருட்கள்
வட்டுக் கத்தரி -15-20
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பால் - 2-3 டேபிள் ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவில்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
இளநீர் அரை கப் அல்லது சர்க்கரை 2 ரீ ஸ்பூன்
தாளிக்க
கடுகு – சிறிதளவு
செத்தல் - 1
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
செய்கை
கையில் கறையை ஏற்படுத்தும் என்பதால் வெட்டு முன் கிளவுஸ் (Gloves) அணியுங்கள்.
காயை மூள் நீக்கி முதலில் பாதியாக வெட்டுங்கள்.
பின் ஒரு அங்குல அகலமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடுங்கள்.
காயில் முற்றிய விதைகள் இருந்தால் விதைகளை நீக்கி விடுங்கள்.
காயை 3-4 தண்ணீரில் கழுவி எடுங்கள்.
வெங்காயம் மிளகாய் இரண்டையும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.
இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள்.
பாத்திரத்தில் காய், உப்பு, பொடி வகைகள், வெங்காயம், மிளகாய், வெந்தயம். கறிவேற்பிலை புளிக் கரைசல் விட்டு அரைக் கப் தண்ணீர் விட்டு இறுக மூடி போட்டு அவியவிடுங்கள்.
நெத்தலிக் கருவாடு சேர்ப்பவர்கள் அதனை நன்கு கழுவி எடுத்து மேற் கூறியவற்றுடன் சேர்த்து அவிய விடுங்கள். கருவாடு இருப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம். அதன் பின் திறந்து கிளறி ஓரிரு நிமிடம் அவியவிடுங்கள். நீர் வற்ற, பால் ஊற்றி இறக்குங்கள். (இளநீர்; கிடைக்காவிட்டால் 2 ரீ ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்குங்கள்.)
தாளித்து குழம்பில் கொட்டி கலந்து மூடி வைத்துவிடுங்கள்.
கசப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதம் புட்டுக்கு ஏற்ற கறியாக இருக்கும்.
மண்சட்டியுடன் வைத்தால் சமைத்த கறி மறுநாளுக்கும் பழுதுபடாது இருக்கும். சுவையும் டபுள் ஆகும்.
நாக்கு நீண்ட பாட்டாவின் முக்கிய குறிப்பு-
கறியை அள்ளி எடுத்தவுடன் மண்சட்டியை உடனே கழுவ வேண்டாம். அதற்குள் அவித்த புட்டைப் போட்டு நன்கு குழைத்து எடுத்தால். சுவை அமோகம் என்கிறார்.
மாதேவி
வட்டுக் கத்தரிகாய்கள் ஏனைய காய்கறிபோல சந்தையில் பார்க்கும் இடமெல்லாம் இப்பொழுது கிடைக்கின்றன. Baddu, Baddu என சிங்களத்தில் கூவிக் கூவி விற்பர்.
கண்டதுமே வாங்கத் தூண்டும்.
வாங்கும் போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுங்கள். பிஞசு என்றால் கசப்பு சற்றுக் குறைவாக இருக்கும்.
வட்டுக் கத்தரி சுவையில் சற்று முகம் சுளிக்க வைக்கும் கசப்பினால்.
பாகற்காய், வாழை மொத்தி, குறிஞ்சா இலை போன்றவையும் அத்தகையனவே. கசப்பானவையே உடல் நலத்திற்கு ஏற்றதென்பது பலரதும் நம்பிக்கையாகும்.
இவற்றை கசப்பு நீக்கி சமைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் சேர்த்து பாற்கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு காரக் குழம்பாகவும், சுவைக்கு நெத்தலி கருவாடு சேர்த்தும் சுவை கூட்டலாம்.
பாட்டியின் கை மணத்திற்காக மண்சட்டியில் சமைத்துள்ளேன். நீங்கள் விரும்பிய பாத்திரத்தில் சமைத்துக் கொள்ளுங்கள்.
சமையற் பொருட்கள்
வட்டுக் கத்தரி -15-20
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பால் - 2-3 டேபிள் ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவில்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
இளநீர் அரை கப் அல்லது சர்க்கரை 2 ரீ ஸ்பூன்
தாளிக்க
கடுகு – சிறிதளவு
செத்தல் - 1
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
செய்கை
கையில் கறையை ஏற்படுத்தும் என்பதால் வெட்டு முன் கிளவுஸ் (Gloves) அணியுங்கள்.
காயை மூள் நீக்கி முதலில் பாதியாக வெட்டுங்கள்.
பின் ஒரு அங்குல அகலமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடுங்கள்.
காயில் முற்றிய விதைகள் இருந்தால் விதைகளை நீக்கி விடுங்கள்.
காயை 3-4 தண்ணீரில் கழுவி எடுங்கள்.
வெங்காயம் மிளகாய் இரண்டையும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.
இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள்.
பாத்திரத்தில் காய், உப்பு, பொடி வகைகள், வெங்காயம், மிளகாய், வெந்தயம். கறிவேற்பிலை புளிக் கரைசல் விட்டு அரைக் கப் தண்ணீர் விட்டு இறுக மூடி போட்டு அவியவிடுங்கள்.
நெத்தலிக் கருவாடு சேர்ப்பவர்கள் அதனை நன்கு கழுவி எடுத்து மேற் கூறியவற்றுடன் சேர்த்து அவிய விடுங்கள். கருவாடு இருப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம். அதன் பின் திறந்து கிளறி ஓரிரு நிமிடம் அவியவிடுங்கள். நீர் வற்ற, பால் ஊற்றி இறக்குங்கள். (இளநீர்; கிடைக்காவிட்டால் 2 ரீ ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்குங்கள்.)
தாளித்து குழம்பில் கொட்டி கலந்து மூடி வைத்துவிடுங்கள்.
கசப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதம் புட்டுக்கு ஏற்ற கறியாக இருக்கும்.
மண்சட்டியுடன் வைத்தால் சமைத்த கறி மறுநாளுக்கும் பழுதுபடாது இருக்கும். சுவையும் டபுள் ஆகும்.
நாக்கு நீண்ட பாட்டாவின் முக்கிய குறிப்பு-
கறியை அள்ளி எடுத்தவுடன் மண்சட்டியை உடனே கழுவ வேண்டாம். அதற்குள் அவித்த புட்டைப் போட்டு நன்கு குழைத்து எடுத்தால். சுவை அமோகம் என்கிறார்.
மாதேவி
Subscribe to:
Posts (Atom)